×

பெரணமல்லூர் அருகே 108 ஆம்புலன்ஸ் கண்ணாடி உடைத்தவர் கைது

பெரணமல்லூர், நவ.14: பெரணமல்லூர் அடுத்த செங்கம்பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் இளையராஜா(30), கூலி தொழிலாளி. இவர் கடந்த 8ம் தேதி இரவு, அதே கிராமத்தில் சித்தாத்தூர் அம்மன் கோயில் அருகே சென்ற போது, அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் இளையராஜா காயமடைந்தார்.
இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால், சம்பவ இடத்திற்கு ஆம்புலன்ஸ் வருவதற்கு ஒரு மணிநேரம் ஆனது. இதனால் ஆத்திரமடைந்த இளையராஜா ஏன் தாமதமாக வந்தீர்கள்? என கேட்டு, டிரைவர் எழிலரசன் மற்றும் உதவியாளர் கணேசன் ஆகியோரை உருட்டுக்கட்டையால் தாக்கி,  ஆம்புலன்ஸ் கண்ணாடியையும் உடைத்தாராம்.  இதுகுறித்து பெரணமல்லூர் போலீசார் வழக்குப்பதிந்து இளையராஜாவை  நேற்று கைது செய்து செய்யாறு கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags : Peranamallur ,
× RELATED ராமச்சந்திர பெருமாள் கோயிலில்...