தென்காசி, நவ. 14: பாவூர் சத்திரம், கீழப்பாவூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை(15ம் தேதி) மின்தடை அறிவிக்கப்பட்டு உள்ளது. கீழப்பாவூர் துணை மின் நிலையத்தில் நாளை(15ம் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுகிறது. இதையொட்டி காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை பாவூர்சத்திரம், கீழப்பாவூர், மேலப்பாவூர், குறும்பலாப்பேரி, நாட்டார்பட்டி, ஆவுடையானூர், வெய்க்காலிப்பட்டி, சின்னநாடானூர், திப்பணம்பட்டி, செட்டியூர், பெத்தநாடார்பட்டி, கரிசலூர், செல்லத்தாயார்புரம், பூலாங்குளம், கோவிலூற்று, மகிழ்வண்ணநாதபுரம், அடைக்கலப்பட்டணம் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது. இத்தகவலை தென்காசி மின்விநியோக செயற்பொறியாளர் கற்பக விநாயக சுந்தரம் தெரிவித்துள்ளார்.