கோவை, நவ.14:கோவை போத்தனூரில் வீட்டுக்குள் புகுந்து இளம்பெண் மற்றும் அவருடைய பெற்றோரை தாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார். மற்ற 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர். கோவை போத்தனூர் கண்ணப்பன் சாலையை சேர்ந்தவர் ராஜா. இவருடைய மனைவி லதா மேரி(49). இவர்களுடைய 24 வயதுடைய மகள் துபாயில் வேலை பார்த்து வருகிறார்.இந்நிலையில் ராஜாவுக்கு உடல் நிலை சரியில்லாத காரணத்தால் அவரை பார்ப்பதற்காக கடந்த 4 நாட்களுக்கு முன்பு அவருடைய மகள் துபாயில் இருந்து கோவை வந்தார். இதனை தொடர்ந்து சம்பவத்தன்று போத்தனூர் மேட்டூரை சேர்ந்த கோபிநாத்(28) என்ற வாலிபர் செல்போனில் ராஜாவின் மகளிடம் பேசியுள்ளார்.