கோவை, நவ. 14: கோவை மாநகராட்சியில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாநகராட்சி கமிஷனர் ஷ்ரவன்குமார் ஜடாவத்திடம் 74 பேர் கோரிக்கை மனுக்களை அளித்தனர். கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாநகராட்சி கமிஷனர் ஷ்ரவன்குமார் ஜடாவத் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநகராட்சியின் அனைத்து பகுதிகளைச்சேர்ந்த பொதுமக்கள் 74 கோரிக்கை மனுக்களை அளித்தனர். இதில் சாலை வசதி, மின்விளக்குகள், குடிநீர் வசதி, சுகாதாரம் போன்ற அடிப்படை வசதிகள் குறித்தும் மற்றும் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை அளித்தனர்.