தூத்துக்குடி, நவ.14: திருச்செந்தூரில் 16ம்தேதி நடைபெறும் திமுக பொதுக்குழு விளக்க பொதுக்கூட்டத்தில் அனைவரும் பங்கேற்குமாறு தெற்கு மாவட்ட பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை மக்களிடம் விளக்குவதற்கு அனைத்து மாவட்டங்களிலும் பொதுக்கூட்டங்கள் நடத்துவதென முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக சார்பில் வரும் 16ம்தேதி மாலை 6 மணிக்கு திருச்செந்தூர் எம்எல்ஏ அலுவலகம் எதிர்புறத்தில் உள்ள மைதானத்தில் பொதுக்கூட்டம் எனது தலைமையில் நடைபெறுகிறது.