திருவொற்றியூர்: திருவொற்றியூர் மண்டலத்துக்கு உட்பட்ட மணலி புதுநகர் பகுதியை சேர்ந்தவர் உதயகுமார் (35). தனியார் பள்ளி ஆசிரியர். இவரது மனைவி மைதிலி. இவர்களுக்கு தான்யா (6) என்ற மகள் உள்ளார். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதையடுத்து கணவரை விட்டு பிரிந்து மைதிலி தனது தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார். பலமுறை உதயகுமார் நேரில் சந்தித்து மைதிலியிடம் சமாதானம் கூறி குடும்பம் நடத்த வரும்படி அழைத்தார். அதை அவர் ஏற்கவில்லை. இதனால் உதயகுமார் விரக்தியில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.