ஓமலூர், நவ.13: ஓமலூரில் 2 கிலோ பிளாஸ்டிக் குப்பைக்கு 1 கிலோ அரிசி வழங்கும் திட்டத்தை பாமக மாநில தலைவர் ஜி.கே.மணி துவக்கி வைத்தார். சேலம் மாவட்டம் ஓமலூரில் பசுமை தாயகம் சார்பில் ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்கும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. பசுமை தாயகம் மாவட்ட தலைவர் சிவகுமார் தலைமை வகித்தார். மாவட்ட வன்னியர் சங்க செயலாளர் முருகன், ராதா ஜூவல்லர்ஸ் சதாசிவம், நகர செயலாளர் சாய்சுஜன் முன்னிலை வகித்தனர். பாமக மாநில தலைவர் ஜி.கே.மணி கலந்துகொண்டு பொதுமக்களிடம் 2 கிலோ குப்பையை பெற்றுக்கொண்டு 1 கிலோ அரிசியை வழங்கி திட்டத்தை துவக்கி வைத்தார்.