×

தேசிய இறகுபந்து போட்டியில் நாமக்கல் மாணவர் தங்கம் வென்று சாதனை

நாமக்கல், நவ. 13:மகராஷ்டிரா மாநிலம் புனேவில், தேசிய அளவில் 17 வயதுக்குட்பட்டோருக்கான ஊரக இறகு பந்து பேட்டி நடந்தது. இதில் நாமக்கல் ஸ்கைஸ் கிளப்பை சேர்ந்த வீரர் ஹரிஸ் கலந்து கொண்டு முதலிடம் பெற்று தங்கம் வென்றுள்ளார். தேசிய அளவிலான போட்டியில் வெற்றிபெற்று சாதனை படைத்த மாணவர் ஹரிஸை மாவட்ட கலெக்டர் மெகராஜ் பாராட்டி பரிசு வழங்கினார். நிகழ்ச்சியில், ஜவகர் பாலபவன், திட்ட அலுவலர் தில்லை சிவக்குமார், கிளப் இயக்குனர் யோகேஷ்குமார் ஆகியோர் உடனிருந்தனர். மாணவர் ஹரிஸ் மாவட்ட அளவில் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான போட்டியில் ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவில் முதல் பரிசு பெற்றுள்ளார்.

Tags : student ,Namakkal ,National Featherweight Championship ,
× RELATED பொதுக்கூட்டம் நடத்த 48 மணி நேரத்துக்கு முன் அனுமதி அவசியம்