×

ஓட்டல் அதிபர் விபத்தில் பலி

சேந்தமங்கலம், நவ.13: எலச்சிப்பாளையம் பெரிய மணலியை சேர்ந்தவர் துரைசாமி(33). இவர் அதே பகுதியில் சொந்தமாக ஹோட்டல் கடை வைத்து நடத்தி வருகிறார். கடந்த 2 நாட்களுக்கு முன் ஹோட்டலுக்கு தேவையான மளிகை பொருட்களை வாங்க ராசிபுரத்திற்கு டூவீலரில் வந்துவிட்டு மீண்டும் வீடு திரும்பியுள்ளார். அப்போது, புதுச்சத்திரம் அடுத்துள்ள கல்லிப்பாளையம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, எதிரே வந்த மினி ஆட்டோ துரைசாமி டூவீலர் மீது மோதியது. இதில் துரைசாமி தூக்கி வீசப்பட்டார். இதனை பார்த்த அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து புதுச்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Hotel owner ,accident ,
× RELATED பொன்னமராவதி குப்பைக் கிடங்கில்...