×

சாராயம் வைத்திருந்த மூதாட்டி கைது

புவனகிரி, நவ. 13: புவனகிரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் புருஷோத்தமன் மற்றும் போலீசார் கீரப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கீரப்பாளையம் ஆற்றங்கரை தெருவைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன் மனைவி அம்சயா(50) என்பவர் தனது வீட்டின் பின்புறம் சாராயம் வைத்திருந்ததை போலீசார் பார்த்தனர். இதையடுத்து அங்கு 3 பெரிய பாலிதீன் பைகளில் இருந்த 105 லிட்டர் சாராயத்தை கைப்பற்றிய போலீசார் அவரை கைது செய்தனர். பின்னர் அவர் மீது வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


Tags :
× RELATED வாய்க்காலில் சடலமாக கிடந்த ஆண் சிசு