×

லாரி மோதி கம்பெனி உரிமையாளர் பலி

விருத்தாசலம், நவ. 13: விருத்தாசலம் நகராட்சிக்கு உட்பட்ட ஆலடி ரோடு ஏபி நகரை சேர்ந்தவர் தணிகாசலம்(54). இவர் அதே பகுதியில் செராமிக் கம்பெனி நடத்தி வந்தார். இந்நிலையில் நேற்று பைக்கில் கம்பெனிக்கு சென்று கொண்டு இருந்தார். அப்போது விருத்தாசலம்-ஆலடி ரோட்டில் பெரிய கண்டியன்குப்பம் குளம் அருகே சென்று கொண்டிருந்தபோது, அவருக்கு பின்னால் வந்த லாரி ஒன்று தணிகாசலம் பைக் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் தலையில் அடிபட்டு பலத்த காயமடைந்த தணிகாசலத்தை அப்பகுதியினர் மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் நேற்று இறந்தார்.
இதுகுறித்து அவரது மனைவி செல்வி கொடுத்த புகாரின்பேரில் விருத்தாசலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : owner ,truck collision ,
× RELATED ஜல்லிக்கட்டுகளில் ஒரே உரிமையாளர்...