×

மனைவியை அடித்து துன்புறுத்தி 2 வது திருமணம் செய்த வாலிபர் கைது

கள்ளக்குறிச்சி, நவ. 13:     கள்ளக்குறிச்சி  அடுத்த இந்திலி கிராமத்தை சேர்ந்தவர் ஆழ்வார் (41). இவரது மனைவி   சத்யா(38). இவர்களுக்கு திருமணமாகி 20 ஆண்டுகளுக்கும் மேலாகிறது. மூன்று  மகன்கள் உள்ளனர். இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு  முன்பு சத்யாவை அவரது  கணவர் ஆழ்வார் மற்றும் அவரது உறவினர்கள்  சுந்தரராஜ்(52), சேதுராமன்(48),  தனலட்சுமி (75), ரமணி (70), புவனேஸ்வரி (46),  சுஜாதா (43), மதுரம்(42),  சந்தியா (28), சந்தியபாமா (50), நாகலட்சுமி (52)  ஆகியோர் ஒன்று சேர்ந்து  சத்யாவை அடித்து துன்புறுத்தி கொடுமைப்படுத்தி வீட்டை  விட்டு வெளியே  துரத்திவிட்டதாக கூறப்படுகிறது.இதனால் தற்போது தியாகதுருகம் அவ்வை தெரு பகுதியில் உள்ள தனது தாய் வீட்டில் சத்யா வசித்து வருகிறார்.

இதனிடையே  முதல் மனைவி மற்றும்  மூன்று மகன்கள் இருக்கும் நிலையில் சத்யாவின் கணவர்  ஆழ்வார் இரண்டாவது  திருமணம் செய்து கொண்டதாக கள்ளக்குறிச்சி அனைத்து  மகளிர் போலீசில் சத்யா புகார் அளித்தார். மேலும் ஆழ்வாருக்கு  உடந்தையாக  செயல்பட்ட சுந்தரராஜ் உள்பட 11 பேர் மீது நடவடிக்கை எடுக்கும்படி புகாரில்  கூறியுள்ளார். அதன்பேரில்  இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி மற்றும் போலீசார்  சத்யாவின் கணவர் ஆழ்வார் உள்பட 11 பேர் மீது வழக்கு பதிந்து ஆழ்வாரை கைது  செய்தனர்.  மற்றவர்களை தேடி வருகின்றனர்.

Tags :
× RELATED திண்டிவனத்தில் 3.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்