×

டெங்கு காய்ச்சல் தடுப்பு பணி

பண்ருட்டி, நவ. 13: பண்ருட்டி அருகே பாலூர், சி.என்.பாளையம் ஆகிய கிராமங்களில் டெங்கு காய்ச்சலை தடுத்திடும் வகையில் சீரமைப்பு பணிகள் நடந்து வருகின்றன. அண்ணா கிராமம் ஊராட்சி ஒன்றிய பிடிஓ சரவணன் தலைமையிலான குழுவினர் அங்கு சென்று பணிகளை துரிதப்படுத்தினர். மேற்கண்ட இரு கிராமங்களில் உள்ள குடிநீர் மேனிலைத்தொட்டிகள் நேரடி கண்காணிப்பில் தூய்மை செய்யப்பட்டது. தூய்மை பணியில் ஈடுபட்டுள்ள பணியாளர்கள், டெங்கு ஒழிப்பு களப்பணியாளர்கள் ஆகியோர் வீடு வீடாக சென்று மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.

Tags :
× RELATED வாய்க்காலில் சடலமாக கிடந்த ஆண் சிசு