×

கரூர் அருகே பரிதாபம் ரயிலில் இருந்து தவறி விழுந்து வாலிபர் பலி

கரூர், நவ. 13: கரூர் அருகே மணவாடி அருகே வந்தபோது ஈரோடு சென்ற ரயிலில் இருந்து ஒருவர் தவறி விழுந்து இறந்தார். திண்டுக்கல் ரயில்வே போலீசார் சடலத்தைக் கைப்பற்றி விசாரித்தனர். அவர் மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா செம்பரணியை சேர்ந்த பால்பாண்டி(40) என்பதும், திண்டுக்கல்லில் இருந்து வேலைக்காக குடியாத்தம் செல்வதற்காக ரயிலில் வந்ததும் தெரிய வந்தது.இது குறித்து ரயில்வே போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.ரயிலில் அடிபட்டு ஒருவர் பலி: கரூர் அருகே உள்ள குளத்துப்பாளையம் ரயில்வே தண்டவாளத்தில் அந்த வழியாக சென்ற ரயிலில் 50 வயது மதிக்கத்தக்க ஆண் அடிபட்டு இறந்து கிடந்தார். கரூர் ரயில்வே சப் இன்ஸ்பெக்டர் சேவுகன் மற்றும் போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அவரது வலது காலில் மாவுக்கட்டு போட்டிருப்பதாகவும், இறந்தவர் குறித்து அடையாளம் தெரிந்தவர்கள் தகவல் தெரிவிக்கலாம் எனவும் ரயில்வே போலீசார் தெரிவித்தனர்.


Tags : accident ,Karur ,
× RELATED பூந்தமல்லி அருகே கார் தலைகுப்புற...