×

குண்டும் குழியுமான சுக்காலியூர் அணுகு சாலையால் வாகன ஓட்டிகள் தடுமாற்றம்

கரூர். நவ. 13: கரூர்- மதுரை தேசியநெடுஞ்சாலையில் சுக்காலியூரில் பாலம் உள்ளது. இந்த பாலத்தின் கீழ்புறம் அணுகு சாலை உள்ளது.திருச்சி மற்றும் கரூர் பகுதிக்கு வரும் வாகனங்கள் இந்த அணுகுசாலை வழியாக வந்து மீண்டும் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் செல்கின்றன. வாகன போக்குவரத்து மிகுந்த இச்சாலை பராமரிக்கப்படாமல் உள்ளது. தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நிர்வாகத்தின் கீழ் உள்ள இந்த சாலையை ஒப்பந்த நிறுவனம் பராமரிக்க வேண்டும்.

கனரக வாகனங்கள் அதிக அளவில் செல்லும் இந்த சாலையை சீரமைக்கவேண்டும் என பலமுறை கோரிக்கை விடுத்தும் பயனில்லை.அணுகுசாலை முடியும் இடத்தில் அதாவது திருச்சி சாலை சந்திக்கும் பகுதியில் வேகத்தடை உள்ளது. வேகத்தடை அருகே சாலை குண்டும் குழியுமாக போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் இருக்கிறது. தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அதிகாரிகள் ஒப்பந்தக்காரரிடம் வலியுறுத்தி சாலையை துரிதமாக செப்பனிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.


Tags : Motorists ,access road ,Sukkaliyoor ,
× RELATED பிரதமர் அடிக்கல் நாட்டியும்...