×

கரூர்- சேலம் நெடுஞ்சாலை பாலத்தின்கீழ் குப்பைகள் நிறைந்து கிடப்பதால் மழை நீர் தேங்க முடியாத அவலம்

கரூர், நவ. 13: கரூரில் சேலம் செல்லும் தேசிய நெடுஞ்சாலை என்எச்7 மேம்பாலம் திருக்காம்புலியூரில் உள்ளது. திருக்காம்புலியூர் பகுதியில் மேம்பாலத்தின்கீழ் பகுதியில் மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த வடிகாலில் அருகில் உள்ள கடைகளின் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. குப்பையை வடிகாலில் போடுவதால் அவ்வப்போது பெய்யும் மழைநீர் தேங்காத நிலைமை உள்ளது. குப்பை மக்கி சுகாதாரகேடாக இருக்கிறது. குப்பைகளை உடனே அகற்றி மழைநீரை சேமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.மேலும் குப்பை போடுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Tags : Karur-Salem Highway Bridge ,
× RELATED குளித்தலையில் மாணவரை ஆயுதங்களால் தாக்கிய வாலிபர் கைது