×

கருணை அடிப்படையில் பெண்ணுக்கு சத்துணவு அமைப்பாளர் பணி ஆணை



அரியலூர், நவ. 13: அரியலூரில் கருணை அடிப்படையில் பெண்ணுக்கு சத்துணவு அமைப்பாளர் பணி ஆணை வழங்கப்பட்டது.புரட்சி தலைவர் எம்ஜிஆர் சத்துணவு திட்டம் மூலம் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியத்தில் மேலணிக்குழி அரசு மேல்நிலைப்பள்ளி சத்துணவு மையத்தில் அமைப்பாளராக பணிபுரிந்த இளங்கோவன் இறந்தார். இதையடுத்து அவரது வாரிசுதாரரான பிரவீனா என்பவருக்கு அரியலூர் கலெக்டர் ஆணைப்படி ஜெயங்கொண்டம் ஒன்றியத்தில் உள்ள படநிலை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக கருணை அடிப்படையில் பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன், கலெக்டர் ரத்னா தலைமையில் ஜெயங்கொண்டம் எம்எல்ஏ இராமஜெயலிங்கம் முன்னிலையில் பணி ஆணை வழங்கப்பட்து.மாவட்ட வருவாய் அலுவலர் பொற்கொடி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொ) ரவிச்சந்திரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) மல்லிகா, ஆவின் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க துணைத்தலைவர் தங்க.பிச்சமுத்து பங்கேற்றனர்.

Tags : Nutrition Organizer ,
× RELATED துவரம் பருப்பு கடத்தப்பட்ட வழக்கில்...