×

அரியலூர் புதிய பேருந்து நிலையத்தில் வெள்ளரிக்காய் விற்பனை அமோகம்

அரியலூர், நவ.13: அரியலூர் புதிய பேருந்து நிலையத்தில் வெள்ளரிக்காய் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. இதனால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.அரியலூர் புதிய பேருந்து நிலையத்திற்கு சென்னை, திருப்பூர், கோயம்புத்தூர், வேலு£ர், விழுப்புரம், மதுரை, தஞ்சாவூர்,திருச்சி, சிவகங்கை,ராமநாதபுரம் உள்ளிட்ட தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் பேருந்துகள் வந்து செல்கின்றன. இதனால் பேருந்து நிலையத்தில் எப்பொழுதும் பயணிகள் வருவதும், போவதுமாக இருந்து வருகிறது. குறிப்பாக தஞ்சாவூர், திருச்சி, மதுரை, காரைக்குடி, சிவகங்கை, ராமநாதபுரம், மணப்பாறை ஆகிய ஊர்களுக்கு அதிக அளவில் பேருந்துகள் வந்து செல்கின்றது. இதேபோல் அரியலூர் மாவட்டத்தில் உள்ள பல கிராமங்களுக்கு நகர பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இதனால் அனைத்து பேருந்துகள் நிற்கும் பகுதியில் பயணிகள் கூட்டம் இருந்துகொண்டே இருக்கும்.

இதனால் பேருந்து நிலையத்தில் முத்திரி பருப்பு, பூ வியபாரம் என பல வியபாரத்தில் சிறுவியபாரிகள் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக அரியலூர் பேருந்து நிலையத்தில் வெள்ளரிக்காய் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. அரியலூர், புதுக்கோட்டை திருமயம், ஆலங்குடி, அறந்தாங்கி, பொன்னமராவதி மற்றும் சிவகங்கை மாவட்டத்தில் விளையக்கூடி வெள்ளிரிகளை வியாபாரிகள் மொத்தமாக வாங்கி பேருந்து நிலையத்தில் மூட்டைகளை அடுக்கிவைத்து விடுகின்றனர். பின்னர் சிறிய கூடைகளில் அதன் கொள்ளளவுக்கு ஏற்ப அடுக்கி வைத்துகொண்டு வெள்ளரி, வெள்ளரி என்று வியாபாரத்தில் இறங்கி விடுகின்றனர். திருச்சியில் இருந்து காரைக்குடி செல்லும் பேருந்து அரியலூர் பேருந்து நிலையத்திற்கு வந்தவுடன் பேருந்தின் இரு பக்கமும் வெள்ளரி வியாபாரிகள் சென்று ஜன்னல் வழியாக வெள்ளிரிக்காயின் விலையை தெரிவித்து விற்பனை செய்கின்றனர். ஒரு சில பயணிகள் தங்களின் வீட்டிற்கு மற்றும் உறவினர்களின் வீட்டிற்கும் சேர்ந்து வாங்கி செல்கின்றனர். போட்டி போட்டுக்கொண்டு விற்னையில் வியாபாரிகள் ஈடுபடுவதால் வெள்ளரி வியாபாரம் அமோகமாக நடந்து வருகிறது.இதனால் வெள்ளரி வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.


Tags : Ariyalur New Bus Stand ,
× RELATED வாக்களிப்பதன் அவசியம் குறித்து...