×

குடிக்காதே என மனைவி கண்டித்ததால் கணவர் விஷம் குடித்து தற்கொலை

மயிலாடுதுறை, நவ.13: நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள கோவங்குடியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (60). இவரது முதல் மனைவி சகுந்தலா என்பவர் இறந்தபிறகு 24 வருடங்களுக்கு முன் தமிழரசி (48) என்ற பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார்.அதிக குடிப்பழக்கம் உள்ள இவர் தொடர்ந்து குடித்து விட்டு வீட்டுக்கு வருவது வாடிக்கை. இதனால் கணவன்-மனைவிக்கு இடையே தினமும் சண்டை ஏற்பட்டுள்ளது. கடந்த 8ம் தேதி இரவு வழக்கம்போல் குடித்து விட்டு வந்த கணவரை பார்த்து தமிழரசி இனிமேல் குடிக்கக் கூடாது என்று கடுமையாக திட்டியுள்ளார். இதனால் விரக்தியடைந்த கிருஷ்ணமூர்த்தி வயலுக்கு தெளிக்க வைத்திருந்த மருந்தை குடித்துவிட்டு மயங்கி விழுந்தார். உடனே அவரை மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருவாரூர் மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் கிருஷ்ணமூர்த்தி இறந்து விட்டார். இதுகுறித்து பெரம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags : suicide ,
× RELATED இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை