×

செல்போனை பறித்து சென்ற வாலிபர் கைது

திருச்சி, நவ. 13: திருச்சி எ.புதூர் காமராஜ் நகர் சத்தியமூர்த்தி தெருவை சேர்ந்தவர் முகமதுஜியாவூதீன் (20). இவர் நேற்று முன்தினம் மதுரை-சென்னை பைபாஸ் சாலையில் செட்டியப்பட்டி பாலம் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியே வந்த ஒருவர் அவசரமாக போன் பேச வேண்டும் என கூறி செல்போனை வாங்கினார். எண்ணை டயல் செய்து பேசுவதுபோல் நடித்த வாலிபர் செல்போனை எடுத்துக்கொண்டு தப்பியோட முயன்றார். இதில் சுதாரித்து கொண்ட ஜியாவூதீன், வாலிபரை விரட்டி பிடித்து எ.புதூர் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் வழக்குபதிந்து நடத்திய விசாரணையில், திருச்சி இபி ரோடு கமலாநேரு நகரை சேர்ந்த சஞ்சீவ் (19) என்பது தெரியவந்தது. இதையடுத்து சஞ்சீவை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags :
× RELATED லால்குடியில் கோதண்டராமர் ஆலய ஏகதின ப்ரம்மோத்ஸவம்