திருச்சி, நவ.13: திருச்சியில் மாவட்ட திமுக அலுவலகத்தில் புதிய இளைஞரணி உறுப்பினர் சேர்க்கை பற்றியும், மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்கவிருக்கும் பொதுக்கூட்டம் பற்றியும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.கூட்டத்தில் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.என்.நேரு கலந்துகொண்டு பேசினார். இதில் வடக்கு மாவட்ட செயலாளர் தியாகராஜன், எம்எல்ஏ சவுந்திரபாண்டியன், மாநகர செயலாளர் அன்பகழன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஆனந்த், மாவட்ட அவைத்தலைவர்கள் தர்மலிங்கம், அம்பிகாபதி, வடக்கு, தெற்கு மாவட்ட துணைச் செயலாளர்கள் முத்துசெல்வம், குடமுருட்டி சேகர், விஜயா ஜெயராஜ், மயில்வாகனன், துரை கந்தசாமி, பொருளாளர்கள் கோவிந்தராஜன், தருமன் ராஜேந்திரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.