×

திருச்சியில் வெவ்வேறு சம்பவங்களில் கல்லூரி மாணவி உள்பட 3 பேர் மாயம்

திருச்சி, நவ. 13: திருச்சி வெவ்வேறு சம்பவங்களில் கல்லூரி, பள்ளி மாணவி உள்பட 3 பேர் மாயமாகினர்.திருச்சி பொன்மலை கணேசபுரத்தை சேர்ந்தவர் பரமநாதன். இவரது மகள் கோமதீஸ்வரி(22). இவர் தனியார் கல்லூரி ஒன்றில் எம்காம் முதலாமாண்டு படித்து வருகிறார். இதில் கடந்த9ம் தேதி கல்லூரிக்கு செல்வதாக கூறி சென்றவர் அதன்பின் வீடு திரும்பவில்லை. தோழிகள் மற்றும் உறவினர் வீடுகளில் தேடியும் காணவில்லை. இதுகுறித்து பெற்றோர் பொன்மலை போலீசில் புகார்் அளித்தனர். போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

மற்ற இரு சம்பவங்கள்: திருச்சி கீழ சிந்தாமணி ஓடத்தெருவை சேர்ந்தவர் குமார் மகள் அர்ச்சனா(16). இவர் தெப்பகுளம் பகுதில் உள்ள பள்ளி ஒன்றில் பிளஸ் 1 படித்து வருகிறார். கடந்த 7ம் தேதி பள்ளி சென்றவர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்த புகாரின் பேரில் கோட்டை போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.இதேபோல திருச்சி கீழஅம்பிகாபுரம் வெங்கடேஸ்வரா நகரை சேர்ந்தவர் மாரிமுத்து மகள் சண்முகபிரியா(19). இவர் காட்டூரில் உள்ள ஸ்வீட்ஸ் ஸ்டாலில் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் வேலைக்கு சென்ற சண்முகபிரியா அதன்பின் வீடு திரும்பவில்லை. இதுகுறித்த புகாரின் பேரில் அரியமங்கலம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.


Tags : Tiruchi ,incidents ,college student ,
× RELATED திருச்சி அருகே பொன்னர் – சங்கர் கோயில்...