×

திருச்சி மாவட்டத்தில் 15ம்தேதி 11 இடங்களில் வருவாய் திட்ட முகாம்

திருச்சி, நவ.12: திருச்சி மாவட்டத்தில் வரும் 15ம் தேதி வருவாய் திட்ட முகாம் 11 இடங்களில் நடக்கிறது என கலெக்டர் தெரிவித்துள்ளார்.தமிழ்நாடு வருவாய்த்துறை சார்பில் வாரம்தோறும் வெள்ளிக்கிழமைகளில் வருவாய் திட்ட சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. அதன்படி திருச்சி மாவட்டத்தில் வருகிற 15ம் தேதி கீழ்க்கண்ட கிராமங்களில் முகாம் நடைபெற உள்ளது. திருச்சி கிழக்கு (தாலுகா)-கொட்டப்பட்டு, திருச்சி மேற்கு - புத்தூர், திருவெறும்பூர்-பழங்கனாங்குடி, ரங்கம்-தாயனூர், மணப்பாறை-சூளியாப்பட்டி, மருங்காபுரி-கஞ்சநாயக்கன்பட்டி, லால்குடி-கல்லக்குடி, மண்ணச்சநல்ரலூர்-அழகியமணவாளம், முசிறி- நெய்வேலி, துறையூர்-மருவத்தூர், தொட்டியம்-கொளக்குடி உள்ளிட்ட கிராமங்களில் வட்டாட்சியர் முதலான வருவாய்த்துறை அலுவலர்கள் முகாமிட்டு பொதுமக்களின் கோரிக்கைகளை பெற்று உடனடியாக தீர்வு காண்பார்கள். இதில் பொதுமக்கள் முதியோர், ஓய்வூதியம் உள்ளிட்ட சமூக பாதுகாப்பு திட்டங்கள், பட்டாமாறுதல், இலவச வீட்டுமனைப்பட்டாக்கள், வீட்டுமனைப்பட்டாக்கள், உழவர்பாதுகாப்பு அட்டை, பிறப்பு இறப்பு சான்றிதழ்கள், சாதிச்சான்றிதழ்கள், குடும்பஅட்டை, நிலம் சம்பந்தமான பிரச்சனைகள் தொடர்பாக மனு கொடுத்து பயன்பெறலாம் என்று மாவட்ட கலெக்டர் சிவராசு வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவித்துள்ளார்.

Tags : places ,Revenue Project Camp ,Trichy District ,
× RELATED புற்று நோய்க்கு போலி மருந்து 10 இடங்களில் ரெய்டு