×

மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் 15ம்தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

திருச்சி, நவ.13: திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வருகிற 15ம் தேதி (வெள்ளி) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுவதால் தகுதியான இளைஞர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வருகிற 15ம் தேதி (வெள்ளிக்கிழமை) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இவ்வேலைவாய்ப்பு முகாமில் தனியார்துறை நிறுவனங்களில் பல்வேறு பணியிடங்களுக்கு பணிவாய்ப்புகளை வழங்கவுள்ளன. இந்த வேலைவாய்ப்பு முகாமில் 10 மற்றும் 12ம் வகுப்பு, ஐ.டி.ஐ, டிப்ளமோ மற்றும் எந்த ஒரு டிகிரி படித்தவர்களும் (18 வயதுக்கு மேல் 35வயதுக்குள் உள்ளவர்கள்) கலந்துகொள்ளலாம். இந்த நேர்காணல் தேர்வில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் அனைத்து அசல் மற்றும் நகல் சான்றிதழ்கள் மற்றும் 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் கலந்து கொள்ள வேண்டும்.முகாம் நடைபெறும் 15ம் தேதி காலை 10 மணிக்கு வர வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் சிவராசு வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவித்துள்ளார்.

Tags : Private Sector Employment Camp ,District Employment Center ,
× RELATED சென்னையில் மாபெரும் தனியார் துறை...