×

58வது வார்டில் இணைத்ததற்கு எதிர்ப்பு


திருச்சி, நவ.13: திருச்சி மாநகராட்சி பகுதி உட்பட்ட பழைய வார்டு எண்.39(புதிய வார்டு எண்.62) ல் அண்ணாநகர் இருந்தது. இப்பகுதியில் வசிப்பவர்கள் அனைவரும் தாழ்த்தப்பட்ட அருந்ததியர் வகுப்பை சார்ந்தவர்கள். மொத்தம் 302 வாக்காளர்கள் உள்ளனர். அண்ணாநகர் பகுதியில் உள்ள அனைத்து பகுதிகளிலும் 62வது வார்டில் தான் உள்ளது.ஆனால் அருந்ததியர் மக்கள் வசிக்கும் அண்ணாநகர் தெரு மட்டும் உள்நோக்கத்துடன் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள 58வது வார்டில் பாகம் எண்.13ல் இணைத்து வாக்காளர் பட்டியலை வெளியிட்டுள்ளனர். இது அண்ணாநகர் மக்களை தனித்தீவு மக்கள் போல் கருதுவதாக அமைந்துள்ளது. இதனை ஒழுங்கு படுத்தி 62வது வார்டில் மீண்டும் அண்ணாநகர் பகுதி மக்களை சேர்க்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்கட்சியின் மாநகர் மாவட்ட நிர்வாககுழு உறுப்பினர் அஞ்சுகம் சார்பில் நிர்வாகிகள் கலெக்டரிடம் மனு அளித்தனர்.

Tags : Ward ,
× RELATED திமுக நிர்வாகி மீது பாமகவினர் தாக்குதல் போலீசார் தடியடி