×

திருச்சியில் 19ம்தேதி ஜவுளி பூங்கா அமைக்க ஆலோசனை கூட்டம்

திருச்சி, நவ.12: திருச்சியில் சிறிய அளவில் ஜவுளி பூங்காக்கள் அமைக்க ஆலோசனை கூட்டம் வரும் நவம்பர் 19ல் நடத்தப்படும் என்று மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார்.தமிழகத்தில் உள்ள ஜவுளி மையங்களின் சிறிய அளவிலான ஜவுளி பூங்காக்கள் அமைப்பதை ஊக்குவிக்கும் வகையில் உள்கட்டமைப்பு வசதி ஏற்படுத்துவதிலும், ஒருங்கிணைந்த ஜவுளிப் பூங்கா அமைக்க முன்வரும் தொழில் முனைவோர்களுக்கு உள்கட்டமைப்புக்கான செலவினத்தில் 50 சதவீதம் அல்லது ரூ.2.50 லட்சம், இவற்றில் எது குறைவோ அதனை நிபந்தனைகளுக்கு உட்பட்டு நிதியுதவியாக வழங்கப்படும் என தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. திருச்சியினில் சிறிய அளவிலான ஜவுளிப் பூங்காக்கள் குறைந்தபட்சம் 3 தொழிற்கூடங்களுடன் 2 ஏக்கர் நிலத்தில் அமைக்கும் திட்டத்தினை உடனடியாக செயலாக்கம் செய்வதற்கான முயற்சியை எடுக்கும் பொருட்டு திருச்சி மாவட்ட முதலீட்டாளர்கள் மற்றும் தொழில் முனைவோர்களுடன் மாவட்ட கலெக்டர் தலைமையில் வரும் நவம்பர் 19ம்தேதி ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் முதலீட்டாளர்கள் மற்றும் தொழில் முனைவோர்கள் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை வழங்கலாம் என்று கலெக்டர் தொிவித்துள்ளார்.

Tags : meeting ,Trichy ,19th Textile Park ,
× RELATED திருச்சியில் ஊஞ்சல் விளையாடிய சிறுவன் கழுத்தில் துண்டு இறுக்கி பலி