×

வருசநாடு அருகே பூசணிக்காய் விளைச்சல் அமோகம்

வருசநாடு, நவ.13: வருசநாடு அருகே பூசணிக்காய் விளைச்சல் அமோகமாக நடந்துள்ளது. வருசநாடு அருகே பூசணியூத்து, புதுக்கோட்டை, சாந்திபுரம், சின்ன சாந்திபுரம் உள்ளிட்ட கிராமங்களில் பூசணிக்காய் விவசாயம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தற்போது பெய்யும் மழையால் பூசணிக்காய் சாகுபடியில் அதிக அளவில் விவசாயிகள் களம் இறங்கியுள்ளார்கள். கார்த்திகை, மார்கழி, தை மாதங்களில் பூசணிக்காய் அறுவடை செய்யப்படும் என விவசாயிகள் தெரிவித்தனர். விவசாயிகள் கூறுகையில், இப்பகுதியில் மொத்த வியாபாரிகள், சில்லரை வியாபாரிகள் நேரடியாக விவசாய நிலங்களுக்கு வந்து முதலீடு செய்து பூசணிக்காய் வாங்கிச் செல்வது வழக்கமான ஒன்று. கடந்த 4 ஆண்டுகளுக்கு பிறகு பூசணிக்காய் விவசாயத்திற்கு ஏற்றவாறு கனமழை பெய்துள்ளது. இதனால் விவசாயிகள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் கனமழையின் காரணமாக மலைக்கிராமங்களில் பூசணிக்காய் விவசாயப் பகுதிகளில் கரடிகள், காட்டுப்பன்றி, நடமாட்டம் அதிகமாக இருந்து வருகிறது. எனவே பயிர்களை பாதுகாப்பதற்கு விவசாய நிலங்களில் தீ கனப்பு போட்டு கண்காணித்து வருகிறோம் என தெரிவித்தனர்.

Tags : rainfall ,
× RELATED மண்பாண்ட தொழிலாளர்களுக்கு மழைக்கால...