திங்கள்சந்தை, நவ.13: நெய்யூர் சர்வதேச புற்றுநோய் மருத்துவ மையம் சார்பில் புற்றுநோய் விழிப்புணர்வு மற்றும் நோய் கண்டறிதல் சிறப்பு முகாம் நெய்யூர் மருத்துவமனை வளாகத்தில் நடந்தது. மெடிக்கல் மருத்துவமனை மிஷன் மேலதிகாரி டாக்டர் ராஜேஷ் சத்தியா தலைமை வகித்தார். பொருளாளர் வக்கீல் வின்சென்ட் முன்னிலை வகித்தார். பாஸ்டர் ஆபேல்ராஜ் ஜெபம் செய்தார். தொடர்ந்து நடந்த புற்றுநோய் விழிப்புணர்வு பேரணியை பிரின்ஸ் எம்எல்ஏ தொடங்கி வைத்தார். நெய்யூர் எல்எம்எஸ் மகளிர் மேல்நிலைப்பள்ளி முன்னாள் தாளாளர் புலவர் செல்லப்பா, மருத்துவ குழு உறுப்பினர் மனோகரசிங் மற்றும் மெடிக்கல் மிஷனுக்கு உள்பட்ட கல்வி நிறுவனங்களின் தாளாளர்கள், முதல்வர்கள், மாணவ மாணவிகள், ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.
மருத்துவமனை முன்பிருந்து தொடங்கிய பேரணி பால்தெரு சந்திப்பு, ரவுண்டானா சந்திப்பு, ராதாகிருஷ்ணன் கோயில் சந்திப்பு வழியாக மீண்டும் மருத்துவமனையை வந்தடைந்தது. பேரணியில் பங்கேற்றவர்கள் புற்றுநோய் விழிப்புணர்வு குறித்த பேனர்கள், பதாகைகள் கொண்டு சென்றனர்.
தொடர்ந்து அங்கு விழிப்புணர்வு பிரசார கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு பிஷப் செல்லையா தலைமை வகித்தார். கூட்டத்தில் ஆதீன பொறுப்பாளர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், நிர்வாக குழு உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர். முகாம் ஏற்பாடுகளை மெடிக்கல் மிஷன் அதிகாரி டாக்டர் ராஜேஷ்சத்தியா, பொருளாளர் வக்கீல் வின்சென்ட் ஆகியோர் செய்திருந்தனர்.