×

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் கும்பல்கள் நடத்தும் படுகொலைகளை கண்டித்து கைெயழுத்து இயக்கம்

நாகர்கோவில், நவ.13 : நாடு முழுவதும் சிறுபான்மையினர், பட்டியல் இன மக்கள், மலை வாழ் மக்கள் கும்பல்களால் படுகொலை செய்யப்படுவதும், தாக்கப்படுவதும் அதிகரித்துள்ளது. இந்த சம்பவத்தை கண்டித்தும், ராஜஸ்தான், மணிப்பூர், மேற்கு வங்கம் மாநிலங்களில் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள கும்பல் படுகொலை தடுப்பு சட்டத்துக்கு ஜனாதிபதி ஒப்புதல் வழங்க கேட்டும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நாடு முழுவதும் ைகயெழுத்து இயக்கம் நடத்தப்படுகிறது.

அதன்படி நாகர்கோவிலில் நேற்று காலை கிருஷ்ணன்கோவில் சந்திப்பில் கையெழுத்து இயக்கம் நடந்தது.  முன்னாள் எம்.எல்.ஏ. லீமாறோஸ் கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார். முன்னாள் எம்.எல்.ஏ. நூர்முகமது, மாவட்ட குழு உறுப்பினர் எஸ். அந்தோணி,  தமிழ்நாடு சிறுபான்மை கூட்டமைப்பு மாநில பொருளாளர் அகமது கான், மாவட்ட தலைவர் எம்.ஏ. சலாம் மற்றும் நிர்வாகிகள் ெஜயம், அஜிஸ், வில்சன், மீனாட்சிசுந்தரம், மோகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags : gangs ,Marxist Communist Party ,
× RELATED பாஜவோடு மறைமுக கூட்டணி நாடாளுமன்ற...