×

மணவாளக்குறிச்சி அருகே கிணற்றில் தத்தளித்த மயில் மீட்பு

குளச்சல், நவ. 13:  மணவாளக்குறிச்சி அருகே உள்ள பள்ளிசாலையை சேர்ந்தவர் அப்துல் ரகீம். இவரது வீட்டின் பின்புறத்தில் அவருக்கு சொந்தமான கிணறு உள்ளது. நேற்று மதியம் அந்த பகுதியில் உணவு தேடி வந்த ஒரு ஆண் மயில் அப்துல் ரகீம் கிணற்றில் தவறி விழுந்தது. கிணற்றில் விழுந்த மயில் வெளியே வரமுடியாமல் தவித்தது. இதனை பார்த்தவர்கள் குளச்சல் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். நிலைய அதிகாரி தேவராஜ் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் ஜெகன், அருள்செல்வன், சிவகணேஷ், கோகுல் சங்கர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கிணற்றில் தத்தளித்துக்கொண்டு இருந்த மயிலை உயிருடன் மீட்டனர். பின்னர் அந்த மயிலை வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.

Tags : Manavalakurichi ,
× RELATED குமரி அருகே பாலத்தின் பக்கவாட்டு...