உடன்குடி,நவ.13: உடன்குடியில் சாக்கு வியாபாரியை கடத்திய மிரட்டிய தந்தை, மகனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். உடன்குடி அருகே சிவன்குடியேற்று வடக்குதெருவை சேர்ந்தவர் பச்சகனி மகன் முத்துகுமார்(39). உடன்குடி பஜாரில் சாக்குவியாபாரம் செய்து வருகிறார். தொழில் விஷயமாக கடந்த 2013ம்ஆண்டு சந்தையடியூரை சேர்ந்த சித்திரைவேல் என்பவரிடம் ரூ.2லட்சம் கடன் வாங்கியுள்ளார்.