வியாபாரியை தாக்கிய தந்தை, மகனுக்கு வலை

உடன்குடி,நவ.13:  உடன்குடியில்  சாக்கு வியாபாரியை கடத்திய மிரட்டிய தந்தை, மகனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். உடன்குடி அருகே சிவன்குடியேற்று வடக்குதெருவை சேர்ந்தவர்  பச்சகனி மகன் முத்துகுமார்(39). உடன்குடி பஜாரில் சாக்குவியாபாரம் செய்து வருகிறார். தொழில் விஷயமாக கடந்த 2013ம்ஆண்டு சந்தையடியூரை சேர்ந்த சித்திரைவேல் என்பவரிடம் ரூ.2லட்சம் கடன் வாங்கியுள்ளார்.

நீண்ட நாட்களாகியும் வாங்கிய கடனை கொடுக்காமல் இழுத்தடித்து வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சித்திரைவேல் அவரது மகன் பாலசிங் ஆகிய இருவரும் சேர்ந்து முத்துகுமாரை அய்யாநகர் காட்டுப்பகுதிக்கு கடத்தி சென்று தாக்கினர். இதில் படுகாயமடைந்த அவர் குலசேகரன்பட்டினம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து தந்தை, மகனை தேடி வருகின்றனர்.                                   

Related Stories: