ஸ்பிக்நகர், நவ.13: தூத்துக்குடி சிவந்தாகுளம் பகுதியை சேர்ந்தவர் எட்மண்ட் (56). இவர் ஸ்பிக்நகர் அருகே நின்று கொண்டிருந்த போது குமாரசாமி நகரை சேர்ந்த குஞ்சரவேல் மகன் உமையர் தங்கம் (20) குடிக்க பணம் கேட்டுள்ளார். எட்மண்ட் பணம் தர மறுத்ததால் ஆத்திரமடைந்த உமையர் தங்கம், எட்மண்டை தாக்கி கொலைமிரட்டல் விடுத்து சென்றார். இதுகுறித்த புகாரின் அடிப்படையில் முத்தையாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து உமையர் தங்கத்தை கைது செய்தனர்.