×

தொழிலாளிகளை மிரட்டிய இருவர் கைது

ஸ்பிக்நகர், நவ.13: தூத்துக்குடி சிவந்தாகுளம் பகுதியை சேர்ந்தவர் எட்மண்ட் (56). இவர் ஸ்பிக்நகர் அருகே நின்று கொண்டிருந்த போது  குமாரசாமி நகரை சேர்ந்த குஞ்சரவேல் மகன் உமையர் தங்கம் (20) குடிக்க பணம் கேட்டுள்ளார்.  எட்மண்ட் பணம் தர மறுத்ததால் ஆத்திரமடைந்த உமையர் தங்கம், எட்மண்டை தாக்கி கொலைமிரட்டல் விடுத்து சென்றார். இதுகுறித்த புகாரின் அடிப்படையில் முத்தையாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து உமையர் தங்கத்தை கைது செய்தனர்.

இதேபோல தூத்துக்குடி முத்துகிருஷ்ணாபுரத்தை சேர்ந்த கணேசன் மகன் அசோக்குமார் (35). முத்தையாபுரம் பல்க்பஜாரில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த தங்கமணி நகர் மூர்த்தி மகன் காளிமுத்து (19) குடிக்க பணம் கேட்டுள்ளார். தன்னிடம் பணம் இல்லை என்று கூறியவுடன் ஆத்திரமடைந்த காளிமுத்து கொலை மிரட்டல் விடுத்தார். இதுகுறித்த புகாரின் அடிப்படையில் முத்தையாபுரம் போலீசார் காளிமுத்துவை கைது செய்தனர்.

Tags :
× RELATED உளவியல் ஆலோசனை கூட்டம்