பிரபல ரவுடி குண்டர் சட்டத்தில் கைது

தூத்துக்குடி, நவ.13.வைகுண்டம் தாலுகா மணக்கரையைச் சேர்ந்தவர் மூக்காண்டி மகன் முருகன்(36). இவர் மீது முறப்பநாடு காவல்நிலையத்தில் பல குற்ற வழக்குகள் உள்ளன. சமீபத்தில் வல்லநாடு பகுதியில் நடந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு பாளை மத்திய சிறையில் உள்ளார். இந்நிலையில் அவரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க எஸ்பி அருண்பாலகோபாலன் கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். இதனையடுத்து கலெக்டர் சந்தீப்நந்தூரி, முருகனை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதனையடுத்து முறப்பநாடு இன்ஸ்பெக்டர் பார்த்திபன், குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் முருகனை சிறையில் அடைப்பதற்கான ஆணையை பாளை மத்திய சிறையில் வழங்கினார்.

Related Stories: