மினிபஸ் மோதி தொழிலாளி படுகாயம்

குளத்தூர், நவ.13: குளத்தூர் அருகே பனையூர் கிராமத்தை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன்(52), கூலித்தொழிலாளி. இவர் கடந்த சில தினங்களுக்கு முன் குளத்தூரையடுத்த அடையக்குளம் கண்மாய் பகுதி வழியாக கல்லூரணி சாலையில் டூவீலரில் வந்து கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த மினிபஸ், டூவீலர் மீது மோதியது. இதில் கோபாலகிருஷ்ணன் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தார். உடனே அப்பகுதியில் உள்ளவர்கள் அவரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து கோபால கிருஷ்ணன் மகன் கனகராஜ் அளித்த புகாரின்பேரில் குளத்தூர் எஸ்ஐ செல்வம், மினிபஸ் டிரைவர் மீது வழக்குபதிந்து தேடி வருகிறார்.

Related Stories: