சாத்தான்குளம், நவ.13: மைனர் பெண்ணை திருமணம் செய்ய பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் வீடுபுகுந்து கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் கைது செய்யப்பட்டார். சாத்தான்குளம் அருகேயுள்ள கிராமத்தைச் சேர்ந்த பத்திரகாளி மகன் சிவா(24). ேஜசிபி டிரைவராக உள்ளார். இவர் அப்பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதையறிந்த சிறுமியின் குடும்பத்தினர் மற்றும் ஊர் பெரியவர்கள் சிவாவை கண்டித்துள்ளனர்.