குளத்தூர், நவ.13: குளத்தூர் கிழக்கு கடற்கரை சாலையில் மதுவிற்றவர் கைது செய்யப்பட்டார். குளத்தூர் எஸ்ஐ செல்வம் மற்றும் போலீசார் கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அப்பகுதியில் உள்ள ஓட்டல் அருகே பூசனூர் கிராமம் மேலத்தெருவைச் சேர்ந்த பரமபண்டாரம் மகன் பாலசுப்பிரமணியன்(42) சட்ட விரோதமாக மது விற்று கொண்டிருப்பது தெரியவந்தது. போலீசார் அவரை மடக்கி பிடித்து கைது செய்து அவரிடமிருந்து 27 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.