சாத்தான்குளம், நவ.13:சாத்தான்குளம் அருகே தேர்தல் முன்விரோதத்தில் சிஎஸ்ஐ சபை நிர்வாகியை கத்தியால் குத்திய 4பேரை போலீசார் தேடி வருகின்றனர். சாத்தான்குளம் அருகேயுள்ள கருங்கடல் போஸ்ட் ஆபீஸ் தெருவைச் சேர்ந்த கனகராஜ் மகன் ஐசக் ரத்தினகுமார்(35). இவர் கருங்கடல் சிஎஸ்ஐ சபையில் செயலாளராக பொறுப்பு வகித்து வருகிறார். இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த மோசஸ் மகன் பீட்டர் பிரபாகரன் என்பவருக்கும் டயோசீசன் தேர்தல் தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது. மேலும் வாலிபர் சங்கம் கணக்கு தொடர்பாக கடந்த 10ம்தேதி அவர்களிடையே மோதல் ஏற்பட்டது. இதில் பீட்டர் பிரபாகரன் உள்ளிட்ட 4 பேரும் ஐசக் ரத்தினகுமார் வீட்டுமுன் ரகளையில் ஈடுபட்டதாக தெரிகிறது.