தூத்துக்குடி, நவ. 13: தூத்துக்குடி சிவந்தாகுளத்தில் குடியிருப்பு பகுதியில் தங்களது எதிர்ப்பை மீறி திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையால் அவதிப்படும் மக்கள், இதை அகற்றுமாறு வலியுறுத்தி உள்ளனர். இதுகுறித்து மார்க்சிஸ்ட் கிளைச்செயலாளர் ஆறுமுகம் தலைமையில், அப்பகுதி மக்கள் கலெக்டரிடம் கொடுத்துள்ள மனு விவரம்: தூத்துக்குடி சிவந்தாகுளத்தில் மத்திய பகுதியான 1வது தெருவில் குடியிருப்புகள் நிறைந்த இடத்தில் டாஸ்மாக் கடையை கடந்த இரு தினங்களுக்கு முன்னர், மக்களின் எதிர்ப்புகளை மீறி அதிகாரிகள் புதிதாகத் திறந்துள்ளனர். அதிக அளவில் குடியிருப்புகள் உள்ள இப்பகுதியில் எப்போதும் மக்கள் நடமாட்டம் மிகுந்து காணப்படும்.