×

தனியார் தங்கும் விடுதியில் பெண்கள் குளிப்பதை படம் பிடித்தவர் கைது

துரைப்பாக்கம்: சென்னை காரப்பாக்கம், ராஜீவ் காந்தி சாலையில் மகளிர் விடுதி ஒன்று உள்ளது. இந்த விடுதியில் கடந்த 3 மாதத்திற்கு முன்பாக ஆந்திரா மாநிலம், நெல்லூர், குண்டுபள்ளி கிராமத்தை சேர்ந்த பிரசாத் (25) என்ற வாலிபர் சமையல் வேலைக்காக சேர்ந்துள்ளார்.இந்நிலையில் நேற்று விடுதியில் உள்ள குளியலறையில் இளம்பெண்கள் குளித்துக்கொண்டு இருந்தனர். இதனை பார்த்த பிரசாத் மறைந்து இருந்து தனது செல்போனில் படம் பிடித்துள்ளார். இதனை மற்ற பெண்கள் பார்த்துவிட்டு அதிர்ச்சி அடைந்து பிரசாத்தை மடக்கி பிடித்து அடித்து உதைத்தனர். பின்னர் அவரை துரைப்பாக்கம் கண்ணகி நகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இது தொடர்பாக  போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரசாத்தை கைது செய்தனர். பின்னர் அவரை ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags : hotel ,
× RELATED பெங்களூரு குண்டு வெடிப்பு சம்பவம்...