ரயில் சேவை ரத்து

சென்னை : பராமரிப்பு பணி காரணமாக வரும் 16ம் தேதி தாம்பரம்-செங்கல்பட்டு இடையே பகுதி நேரமாக ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்ட அறிவிப்பு: சென்னை

கடற்கரையில் இருந்து அதிகாலை 3.55 மணி, 4.35, 5.15, 5.50, 6.05, 6.43 மற்றும் மாலை 5.18 ஆகிய நேரங்களில் செங்கல்பட்டுக்கு செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது. இதேபோல், செங்கல்பட்டில் இருந்து அதிகாலை 3.55, 4.35, 4.50, 6.40, 6.55, 8.40 மற்றும் இரவு 7.25 ஆகிய நேரங்களில் கடற்கரை நிலையத்திற்கு செல்லும் ரயில்கள் பகுதிநேரமாக ரத்து செய்யப்படுகிறது.

Related Stories: