×

கடமலைக்குண்டு அருகே இலவச வீட்டு மனை பட்டா வழங்க பொதுமக்கள் கோரிக்கை

வருசநாடு, நவ.12:கடமலைக்குண்டு அருகே இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கடமலைக்குண்டு அருகே டாணா தோட்டம் கிராமத்தில் சுமார் 50க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது. இங்கு கடந்த 50 ஆண்டுகாலமாக இங்கு வசிக்கும் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகளான சாலை வசதி, குடிநீர் வசதி, மின்சார வசதி இவை அனைத்தும் பாதிப்படைந்த நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சில மாதங்களாக இலவச வீட்டு மனை பட்டா வேண்டி வட்டாட்சியர் அலுவலகத்திலும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்திருந்தனர். இந்த மனுவினை தொடர்ந்து அதிகாரிகள் சில தினங்களுக்கு முன்பு வந்து ஆய்வு பணியை மேற்கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து இதுவரையும் இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கப்படாததால், விரைவில் வீட்டுமனை பட்டார வழங்க வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சிலர் கூறுகையில், ‘அரசு கொடுக்கக்கூடிய தொகுப்பு வீடு, பசுமை வீடு போன்ற பணிகளை செய்வதற்கு வீட்டுமனை பட்டா இல்லாமல் மிகவும் பாதிப்படைந்து வருகிறோம். எனவே அரசு சிறப்பு பணிகளை பெறுவதற்கு விரைவில் வீட்டுமனைப்பட்டா வழங்க வேண்டும். இதற்கு தேனி மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

Tags : housing land ,Kadamalai kundu ,
× RELATED கடமலைக்குண்டு அருகே குண்டும்,...