திண்டுக்கல், நவ. 12: சென்னையில் நடக்கவுள்ள உலக ரோல்பால் போட்டியில் இந்திய அணி சார்பில் விளையாடவுள்ள 24 வீரர், வீராங்கனைகளுக்கு பயிற்சி நிறைவடைந்தது.
அகில இந்திய ரோல்பால் போட்டிகள் சென்னை பெரம்பூர் ஐசிஎப்பில் உள்ள பழனிச்சாமி உள்விளையாட்டரங்கில் நவ.15ம் தேதி முதல் நவ.20ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் கனடா, நியூசிலாந்து, ஜெர்மன், ஜப்பான், உருகுவே, அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா, நேபாளம், எகிப்து, சவுதி அரேபியா, பிரான்ஸ், பங்களாதேஷ், நெதர்லேண்ட், கென்யா உட்பட 27 நாடுகள் கலந்து கொள்கின்றன. இந்திய அணி சார்பாக கலந்து கொள்ளும் விளையாட்டு வீரர்களுக்கான தேர்வு முகாம் குஜராத் மாநிலம், சூரத்தில் நடந்தது. இதில் ஆண்கள் அணி சார்பில் 12 பேரும், பெண்கள் அணி சார்பில் 12 பேரும் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கான பயிற்சி முகாம் சின்னாளபட்டி பிரிவில் உள்ள ராஜன் உள்விளையாட்டரங்கில் கடந்த அக்டோபர் 15ம் தேதி முதல் 20ம் தேதி வரை நடைபெற்றது.