திண்டுக்கல், நவ. 12: அம்பாத்துரை அமலிநகர் பகுதியில் குடிநீர் வந்து ஒரு ஆண்டாகி விட்டதாக அப்பகுதி மக்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர். திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறுவது வழக்கம். நேற்று மக்கள் குறைதீர் கூட்டத்திற்கு கலெக்டர் விஜயலட்சுமி தலைமை வகித்து பொதுமக்களிடம் மனுக்களை வாங்கினார். அம்பாத்துரை ஊராட்சி, பெருமாள்கோவில்பட்டி அஞ்சல், அமலிநகரை சேர்ந்த பொதுமக்கள் காலிக்குடங்களுடன் வந்து கலெக்டரிடம் மனு அளித்தனர். அந்த மனுவில், ‘எங்கள் பகுதியில் சுமார் 300 குடும்பங்கள் வசித்து வருகிறோம். எங்களுக்கு குடிநீர் வந்து ஒரு ஆண்டாகிறது.