ஆற்காடு, நவ. 12: ஆற்காடு கஸ்பா பகுதியில் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் அலுவலகம், தாசில்தார் குடியிருப்பு, அதற்கு பக்கத்தில் ஆர்ஐ அலுவலகம், கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் ஆகியவை உள்ளது. மேலும் கூட்டுறவு விற்பனை சங்க அலுவலக வளாகத்தில் அரசின் மண்ணெண்ணெய் விற்பனை நிலையம் உள்ளது. மேற்கண்ட அலுவலகங்களுக்கு ஆற்காட்டைச் சேர்ந்த பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் தங்களது தேவைகளுக்காகவும், பல்வேறு சான்றுகள் பெறுவதற்கும் வந்து செல்கின்றனர். மேலும், இந்த அலுவலகங்கள் வழியாகத்தான் தாலுகா அலுவலகம், நீதிமன்றம், துணை கருவூலம், பத்திரப்பதிவு அலுவலகம், அரசு கண் மருத்துவமனை போன்றவற்றிற்கு பொதுமக்கள் செல்கின்றனர். இதனால் இந்த பகுதி எப்போதும் பரபரப்பாக உள்ளது. இந்நிலையில், ஆர்ஐ அலுவலகத்தின் முன்புறம் மின்கம்பம் ஒன்று உள்ளது. இந்த கம்பத்திலிருந்து அப்பகுதியை சேர்ந்த கடைகளுக்கும், வீடுகளுக்கும் மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.