கெங்கவல்லி, நவ.12: வீரகனூரில் கோஷ்டி தகராறில் கைது படலத்தால் மீண்டும் மோதல் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அப்பகுதியில் போலீஸ் குவிப்பால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வீரகனூர் கிழக்கு வீதியில் பொது வழித்தட ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி, புரட்சி பாரதம் கட்சியின் மாநில செயலாளர் சுந்தர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து, கடந்த 6ம் தேதி நில அளவீடு பணி நடைபெற்றது. இதுதொடர்பாக இருதரப்பினரிடையே முன்விரோதம் ஏற்பட்டது. சுந்தர் தனது உயிருக்கு ஆபத்து உள்ளதாக கூறி, பாதுகாப்பு கேட்டு வீரகனூர் காவல் நிலையத்தில் முறையிட்டார். இதனைத்தொடர்ந்து, கடந்த 9ம் தேதி இரவு எதிர்தரப்பினர் வீடு புகுந்து சுந்தரை சரமாரி தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில், எதிர்தரப்பைச் சேர்ந்த அந்தோணியம்மாள், வடிவேலு, சந்தோஷ், சதீஷ் உள்பட 7 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.