×

மின்சாரம் தாக்கி யானை இறந்த வழக்கில் விவசாயி கைது

சத்தியமங்கலம், நவ.12:    தாளவாடி அருகே உள்ள முதியனூர் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி மாதேவசாமி (47). இவரது தோட்டம் வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளது. இவர் தனது தோட்டத்தில் மக்காச்சோளம் பயிரிட்டுள்ளார். அருகே வனப்பகுதியிலிருந்து வெளியேறும் காட்டுப்பன்றி, மான், யானை உள்ளிட்ட வனவிலங்குகள் இப்பகுதியில் உள்ள விவசாய விளைநிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்துவதால் மாதேவசாமி தனது நிலத்தை சுற்றிலும் மின் வேலி அமைத்துள்ளார். நேற்றுமுன்தினம் அதிகாலை வனப்பகுதியை விட்டு வெளியேறிய யானை, மாதேவசாமி பயிரிட்டுள்ள மக்காச்சோள பயிருக்குள் நுழைய முயன்றபோது மின்வேலி மின்சாரம் தாக்கி இறந்தது. சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர், சுமார் 40 வயது மதிக்கத்தக்க பெண் யானை இறந்து கிடப்பதை பார்த்தனர்.யானையின் உடலை வனத்துறை கால்நடை மருத்துவர் அசோகன் பிரேதப்பரிசோதனை செய்ததில் யானை மின்சாரம் தாக்கி இறந்தது உறுதிப்படுத்தப்பட்டது. மின்வேலியில் உயரழுத்த மின்சாரம் பாய்ச்சிய மாதேவசாமியை வனத்துறையினர் கைது செய்து சத்தியமங்கலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.  தகவலறிந்த மின்வாரிய அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்ததில் மின்வேலியில் உயரழுத்த மின்சாரம் பாய்ச்சியது உறுதி செய்தனர். இதையடுத்து மின்வாரியம் சார்பில் மாதேவசாமி மீது ஆசனூர் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

Tags : death ,
× RELATED மாஸ்கோவில் நடைபெற்ற இசை...