ஈரோடு, நவ. 12: போதிய ஆசிரியர்கள் இல்லாததால் மாணவர்களின் கல்வி கேள்விக்குறியாகி உள்ளதாக கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் நேற்று மனு அளித்தனர். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் தாலுகா சிக்கரசம்பாளையம் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பள்ளி குழந்தைகளுடன் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: சத்தியமங்கலம் தாலுகா சிக்கரசம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட சிக்கரசம்பாளையம் அரசு தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் தற்போது 160 பள்ளி குழந்தைகள் படித்து வருகிறார்கள். ஆனால், இங்கு ஒரு தலைமை ஆசிரியர், ஒரு வகுப்பாசிரியர் மட்டுமே பணியாற்றி வருகிறார்கள்.
கடந்தாண்டு இந்த பள்ளியில் 120 குழந்தைகள் இருந்தனர்.