×

காட்சி பொருளான குடிநீர் தொட்டி

தியாகதுருகம், நவ. 12:  தியாகதுருகம் ஒன்றியத்தில் சுமார் 40க்கும் மேற்பட்ட ஊராட்சிகள் உள்ளன. உள்ளாட்சி தேர்தல் நடக்காததால் அந்தந்த ஊராட்சி கிராமங்களில் உள்ள ஊராட்சி செயலர்கள் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை தீர்க்க முடியாத நிலை உள்ளது. தியாகதுருகம் ஒன்றியம் புக்குளம், உதயமாம்பட்டு, மாம்பட்டு போன்ற 15க்கும் மேற்பட்ட கிராமங்களில் மின் மோட்டார் வசதிடன் கூடிய குடிநீர் தேக்க தொட்டி அந்தந்த ஊராட்சிகளில் அமைந்துள்ளது.இதனை கிராம மக்கள் குடிப்பதற்கும், அன்றாட தேவைக்கு ஏற்றவாறு பயன்படுத்தி வந்தனர். ஆனால் இன்று அது வெறும் காட்சி பொருளாக உள்ளது. கடந்த 6 மாத காலமாக அதனை பயன்படுத்த முடியாமல் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். அப்பகுதி மக்கள் கூறுகையில் இந்த மின் மோட்டார் பழுதடைந்து போனது. அதனை ஊராட்சி அதிகாரிகள் வந்து சரி செய்தனர். அது இரண்டு நாட்கள் கூட இயங்கவில்லை. இப்போது அதை சரி செய்து 1 வருடத்திற்கு மேலாக அது காட்சி பொருளாக உள்ளது. தற்போது, மழைக்காலம் என்பதால் குடிநீர் பற்றாக்குறை ஓரளவிற்கு சமாளிக்க முடிகிறது. இதுவே கோடைக்காலம் என்றால் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகும் சூழ்நிலைக்கு தள்ளப்படுவோம். ஆகையால் எங்களுக்கு இந்த மின் மோட்டாரை பழுது பார்த்து நீர் தேக்க தொட்டியை சீரமைத்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED பாலியல் பலாத்காரம் செய்து சிறுமியை கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை