திருக்கோவிலூர், நவ. 12: திருக்கோவிலூர் அருகே அம்மன்கொல்லைமேடு கிராமத்தை சேர்ந்தவர் குப்பன் மகன் ஜெயபால் (44), விவசாயி. இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த முனியன் மகன் ஆனந்தன் என்பவருக்கும் கடந்த 4 மாதத்துக்கு முன்பு நிலம் சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று ஜெயபால் மற்றும் அதே ஊரை சேர்ந்த முருகன், நடராஜன் ஆகிய 3 பேரும் ஜெயபால் நிலத்துக்கு சென்றனர். அப்போது, ஆனந்தன் நிலத்தில் இருந்த பீர்க்கங்காயை முருகன் பறித்துள்ளார். இதைக்கண்ட ஆனந்தன், அவரது உறவினர் அய்யனார் மகன் சத்தியராஜ் (25), ஆனந்தன் மனைவி மேகலா (29) ஆகிய 3 பேரும் ஜெயபாலுடன் வாக்குவாதம் செய்து தகராறில் ஈடுபட்டனர்.